Saturday, November 7, 2009

வெற்றி/ தோல்வி ...

வெற்றி/ தோல்வி

வெற்றியை ருசிக்க
வேண்டுமா ?
தோல்வியை ரசிக்க
கற்றுக்கொள் !!
*********************************************************
வெற்றியின் களிப்பில்
நீ திளைத்திருந்தால்
உன்னை தெம்பேற்ற
சில தோல்விகளும் வருகிறது ....காத்திரு...!!
*********************************************************

Monday, September 28, 2009

பிரிவு /தனிமை!!



பிரிவில் தான்
பிரியம் தெரியுமாம் !
வா ஓர் இருமுறை
பிரிந்து பார்க்கலாம் !!
************************************
தனிமை சிறையும்
இனிதே !!
உன் நினைவுகள் என்னும்
காவல் இருக்குமாயின் !!
-மோகன்
*************************************
பி.கு : இந்த ஸ்வைன் ப்லூ காய்ச்சல் நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு !? அது வர மாதிரி தெரிஞ்சா "இன்று போய் நாளை வா !! " அப்படின்னு தினமும் சொல்லிருங்க !!;)

பி.பி.கு : மேற்கண்ட விஷயங்களில் நாட்டம் இல்லாதோர் நம்ம கேப்டனுக்கு போட்டியா வந்திருக்க "சிவகிரி" படம் பார்த்து என்சாய் பண்ணலாம் !!;)

Tuesday, June 9, 2009

நடைமுறையில் உள்ள சில வழக்கங்கள்...:)

நண்பர்களே ,

நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சில வழக்கங்களை நகைச்சுவையாக கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள் !!:) ...

வழக்கமான அரசியல் வாசகம் (எந்த கட்சி தோற்றாலும்):

*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ... ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !!(அடங்குங்க ட டே!! )
*இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி !(ஆமா நீங்க பண்ணதே இல்ல ..!)
*நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாய் இருந்து மக்களுக்காக பாடுபடுவோம் !!(ஆளு அட்ரஸ்ஸெ காணும் ....!)


வழக்கமான சினிமா வில்லத்தனம் :

*எப்பொழுதும் கதாநாயகியின் தந்தை செல்வந்தராக இருப்பார் முக்கியமாக தாதாவாக இருப்பார்
*கண்டிப்பாக ஹீரோவை அடிக்க ஆட்களை அனுப்புவார் இறுதியில் அவரே சென்று அடி வாங்குவார்
*கண்டிப்பாக கதநாயகியய் (சுமாராக இருந்தால் கூட ) கடத்தியே ஆகா வேண்டும் !!
*பின்பு கதாநாயகனிடம் அடி வாங்கி திருந்த வேண்டும் !



வழக்கமான சினிமாவில் காட்டப்படும் வாழ்கையின் முன்னேற்றம் :

ஒரே பாடலில் குடிசையில் இருந்து பளிங்கு மாளிகைக்கு சென்றுவிடுவர் ...

*நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிபாகுது......
*வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ....
*வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு ....!!!! ......


வழக்கமான சினிமா ஹெரோஇசம் :

*ஊர் போற்றும் பிள்ளையாக விளங்குவது....
*கண்டிப்பாக தங்கச்சி இருக்கவேண்டும்....
*அதுவும் அந்த தங்கச்சியின் மாமியார் கொடுமை படுத்த வேண்டும் ...
*எவ்வளவு பலசாலியான எதிரியாய் இருந்தாலும் முடிவில் ஹீரோவிடம் அடிபட்டே ஆகா வேண்டும் ......
*பின்னணி இசையோடு கண்டிப்பாக 1 அல்லது 3 KM நடந்தே ஆகா வேண்டும் ...
*துப்பாக்கி சண்டையில் எவ்வளவு சுட்டாலும் ஹீரோக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் தான் பாயும் அதுவும் சரியாக கையில் தான் படும்
*வெடிகுண்டு வீசினால்... அதுவும் கார் சேசிங் என்றால் கண்டிப்பாக அது வேறுதிசையில் தான் விழும் !!
*எப்பொழுதும் கதாநாயகன் வெடிகுண்டை அது எங்கு இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவார் அது மட்டும் அல்லாமல் அதன் சிவப்பு நிற வயரை துண்டித்து செயலிழக்க செய்வார் !!
*எவ்வளவு முரட்டான காளை மாடாய் இருந்தாலும் கண்டிப்பாக அது அடங்கியே ஆகா வேண்டும் ... அதற்க்கு கதாநாயகன் பாடினால் கூட சரி(பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி .....) !!!!


வழக்கமான சினிமா போலீஸ்தனம்:

*எப்பொழுதும் துப்பாக்கியில் சுடும்போது முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும் !!!
*(Major சுந்தராஜன் style) "You are under arrest" 'நான் உன்னை கைது செய்றேன்' -ர வசனத்தை எத்தன வருஷம் ஆனாலும் சொல்ல வேண்டும் !!
*எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும் ஆடி அசைந்து ஹீரோ வில்லனை கொல்ல என்னும் போது வந்து தடுக்க வேண்டும் ....

-மோகன்

பி.கு : இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல !!! :)அனைத்தும் நீங்கள் சிரித்து மகிழ்வதர்க்கே !!

Friday, May 22, 2009

சில சிரிப்பு வெடிகள் !!:)!!

சில சிரிப்பு வெடிகள் !!:)!!------------------------------------------------------------------------
அமெரிக்கால திருடங்கள கண்டுபுடிகுற மெஷின் ஒன்னு கண்டுபுடிச்சி இருக்காங்களாம் !!!...அந்த மெஷின் இங்கிலாந்துல 1 மணி நேரத்துல 70 திருடங்கள கண்டுபிடிச்சிருக்கு !!பிரான்சில 1 மணி நேரத்துல 80 திருடங்கள கண்டுபிடிச்சிருக்கு !!இந்தியாவில 10 நிமிஷத்துல அந்த மெஷினையே காணுமாம் !!!நம்மெல்லாம் யாரு நம்மகிட்டயேவா ?!?!
-------------------------------------------------------------------------
ஆசிரியர் : உலகை முதலில் சுற்றி வந்தது யாரு ??
மாணவன் (In Captain's Style): அட, விடுங்க டீச்சர்.... ஊர் சுத்தற பயல பத்தி, நமக்கென்ன பேச்சு...!!! (captain's trademark finish)
-------------------------------------------------------------------------
டாக்டர் : சாரி ..! உங்க கிட்னி பெயில் ஆயுடுச்சு!!! நோயாளி : என்ன கொடுமை டாக்டர் இது !?!நான் என் கிட்நீய படிக்கவைக்கவே இல்லை அதெப்படி டாக்டர் ?!?!
-------------------------------------------------------------------------
வடிவேல் : (Winner style ) தம்பி .. நாங்கதான் பெரிய காமெடியன் தெரியும்ல!!
விவேக் : இல்லை நான் தான் உன்ன விட பெரிய காமெடியன் !!
கருணாஸ் : மெதுவா பேசு மாப்ள..! பக்கத்துல <........> இருக்கார் !!!;)!
--------------------------------------------------------------------------
பி. கு : <........>இதில் உங்களுக்கு பிடித்த /ரசித்த /கலாய்த்த சினிமா பிரபலங்களை நிரப்பிக்கொள்ளலாம் !!!;)!இவை யாவும் கற்பனைக்கே மற்றும் நகைச்சுவைக்கே :)!

Tuesday, May 12, 2009

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

ஏற்றம் இல்லையேல்
முன்னேற்றம் இல்லை ...!

மாற்றம் இல்லையேல்
புதுமை இல்லை ...!

குறிக்கோள் இல்லையேல்
லட்சியம் இல்லை ...!

தோல்வி இல்லையேல்
முயற்சி இல்லை ...!

இவை யாவும் இல்லையேல்
வாழ்வில் சுவாரஸ்யம் இல்லை ...!

முயன்றிடு ....! முன்னேரிடு ....! உயர்ந்திடு ....!!

-மோகன்

Wednesday, May 6, 2009

தராசு



அன்புடையீர் வணக்கம் !!,:)


எனக்கு வாக்களித்த நல்லுள்ளங்களுக்கு முதற்க்கண் என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் !!! இதோ ஒரு ஹைக்கூ ...!!





தராசு
இது இருப்பதோ
நீதி தேவதை கையில் ...!!
ஆனால் நீதி இருப்பதோ
இன்று... யார் கையில் ...!?!

- மோகன்

Wednesday, April 29, 2009

தேன் - தேனீ......

தேன் - தேனீ......

தேனீ வந்து சீண்டிய பின் தான் தேன் இருப்பது பூவுக்கு தெரியும்!!!
தேன் சுவையை நாம் அறிய வேண்டுமானால்..!
அத்தேனீக்கள் தம் உயிரையும் கூட்டையும் தியாகம் செய்ய வேண்டும்!
அந்தோ தேனீ..!!:(!


(or)

பூக்களை சீண்டியதற்கு பரிசு தேன் என்று நினைத்த தேனீக்கு..
அதே தேனிற்காக தன்னையும் சீண்டுவர் பலர் என்று தெரியாமல் போனதே !!!!
அந்தோ தேனீ..!:(

-மோகன்

Sunday, April 26, 2009

சில ஹைக்யுகள்……

மரம்
இருந்தால் நிழல்..!!
இறந்தால் நார்க்காலி!!!

பணம்
ஆம்!! பத்தும் செய்யும் இருப்பவனுக்கு ..
இல்லாதவனுக்கும் தான்.. அவன் ரத்தமும் சிறு நீரகமும் விற்றப்பின்பு !!
- மோகன்