Saturday, May 22, 2021

Corona Hykoo -கொரோனா


நங்கள் அடிமையாய் 
உள்ளே 
நீ 
சுதந்திரமாய் 
வெளியே ..
"கொரோனா" ..!!
-மோகன்
#corona #tamil #Hykoo 

Tuesday, October 5, 2010

எந்திரன் - Movie Review







பெயருக்கு ஏற்றவாறு இயந்திரத்தனம் மிக்க இந்திய தமிழ் திரைப்படம் . கடந்த மூன்று வருடங்களாக மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் . இவர் நடிப்பார அவர் நடிப்பாரா என்று ஆவலுடன் காத்திருந்த படம் (கமல்,ஷாருக் கான், அஜித்திற்கு நன்றி)

அமரர் சுஜாதாவின் படைப்பான 'என் இனிய இயந்திரா' டி. டி. தொலைகாட்சியில் கண்டிருப்போம், அந்த மூல கதையை கொண்டு கதாபாத்திரம் அமைத்து சூப்பர் ஸ்டாரை நன்றாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். அவருக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் !!

சொட்டு :
*ரஜினி - படம் முழுவதும் நிறைந்து காணப்படுகிறார், அவரது உழைப்பு திரையில் தெரிகிறது .மேலே கூறிய நன்றிக்கு காரணம் ரஜினியை தவிர வேறு யாரும் இக்கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்க முடியாது
*செயற்கைத்தனம் கம்மியான கிராபிக்ஸ் காட்சிகள்
*பிரம்மாண்டம் (ஷங்கர் படம் ஆச்சே !)
*ஐஸ்வர்யா பச்சன் (சில காட்சிகளில் வயது காட்டி கொடுக்கிறது இருப்பினும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார் )
*ஏ .ஆர் .ஆர் இசை மற்றும் பாடல் காட்சிகள்
*க்ளைமாக்ஸ்

கொட்டு :
*தேவை இல்லாத சில காட்சிகள்/பாடல்கள் (கொசுவிடம் பேசுவது...)
*சந்தானம் மற்றும் கருணாஸ் (படத்தில் எதற்காக என்று தெரியவில்லை )
*இரண்டாம் பாதியின் நீளம் (சற்று கத்திரி செய்திருக்கலாம் )

பி.கு :எந்திரன்- ரசிகர்களை தன் வசம் ஈர்த்த தந்திரன் !!! DOT

பி.பி.கு : உலகம் பூரா படத்தோட ரிசல்ட் நல்லா தான் போயிட்டு இருக்கு அதுக்காக அஞ்சு நிமிசத்துக்கு ஒருக்க சன் டிவில காட்டிட்டு இருக்கானுங்க தாங்கல

பி.பி.பி.கு : படம் ரிலீஸ் ஆன முதல் நாள் பார்க்க முடியலைனாலும் ரெண்டாவது நாள் பார்த்தாச்சு - Mission accomplished

பி.பி.பி.பி.கு : மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர் எந்திரன் டிக்கட் எடுக்கும் கௌண்டரில் நின்று "எந்திரன் மொக்கை படம் சார்" அப்படின்னு கூறலாம்... ட்ரை பண்ணி தான் பாருங்களேன்...;)

Saturday, July 24, 2010

நாங்கெல்லாம் உலக மகா குக்கு….. குக்கு… குக்கு


நாங்கெல்லாம் உலக மகா குக்கு….. குக்கு… குக்கு ....(Echo effect..)




வணக்கம்,!!


சமையல் ஒரு அருமையான விஷயம். அதை மிக அழகாக, நேர்த்தியாக செய்தால் அதற்க்கு மதிப்பே ஜாஸ்தி! எனக்கு விவரம் தெரிஞ்சு, அப்படி ருசியா, அழகா சமைக்கிறது எங்க அம்மா, அப்புறம் எங்க அக்கா..!!!

போன மாசம் அந்த அதிசயம் நடந்தது ... !

எங்களுக்கு வழக்கமா வார இறுதி நாட்கள்ல சாப்பாடு ஏற்பாடு பண்ணி தர கேடரர் அவரோட மாமியாருக்கு உடம்பு சரி இல்லன்னு அவங்க வீட்டுகரம்மா வெலக்கமாத்தாலயெ அடிச்சு தர தரன்னு கூட்டிட்டு போறங்கன்னு ரொம்ப வருத்தமா போன் போட்டு வெள்ளிக்கிழமை சாயங்காலம் சொன்னாரு ...


என் ரூம் மேட்சும் ஊருக்கு போய்ட்டாங்க ..இப்படி பல தடவ நடந்த்ருக்கு ஆனா எனக்கென்னவோ நம்மளும் ஏன் சமைக்க கூடாதுன்னு தோனுச்சு ..என் நெருங்கிய நண்பர் பெங்களூர்ல வேலை பாக்குறார் அவரு தான் இதுக்கு தூண்டுகோல்.. அவரு வச்ச சாம்பார் அப்றமா உருள கிழங்கு பொரியல் டாப்பு !!


சரி இப்போ சம்சாரத்துக்கு வருவோம் ..ச்சே சமாசாரத்துக்கு வருவோம் ...!

சனிக்கிழமை காலைலயே நம்ம ஆராய்ச்சிய ஆரம்பிக்கலாம்னு இருந்தேன், அதாங்க சமைச்சு பார்த்துருவோம்னு தான். என்ன பண்ணலாம்னு யோசிக்கறப்போ ..?


"சிக்கல்கள் பலவாயினும் அதை தீர்க்கும் உன்னதம் உனது தன்னம்பிக்கையே !!"


அப்படின்னு தோனுச்சு !!

மாகி பக்கெட் ரெண்டு வாங்கிட்டு வந்தேன் கூடவே வெங்காயம் ,தக்காளி , மிளகாயும் !!

எங்க பாச்சலர் ரூம்ல என் ரூம்மேட்டு ஒருத்தர் தான் வீட்டிலேயே சமச்சி சப்பிடராரு அதனால சமயகட்ட ரொம்ப சுத்தமா பக்கவா வச்சிருப்பாரு நாங்க வெறும் தண்ணி குடிக்க மட்டும் தான் அந்த பக்கம் எல்லாம் போறது .. இப்போ தான் ஒரு போர்களத்துக்கு போற எப்பக்டுல போனேன் .

சென்னைல வீட்டுல முன்ன ஒருக்க தோசை சுடுறேன்னு கொத்து தோசை சுட்டு அம்மாகிட்ட தோசை வாங்கினது எல்லாம் கண்ணுமுன்னாடி வந்துட்டு போச்சு..!


சரி ஒரு கை பார்ப்போமேன்னு நம்பி ஆரம்பிச்சேன் !


வாங்கிட்டு வந்த வெங்காயத்த நறுக்க ஆரம்பிச்சேன் அப்போ வந்த கண்ணீருல நான் போட்ட டி ஷர்ட்டே நனஞ்சிருச்சு !! யப்பா சாமிகளா கண்ணுல தண்ணி வராம வெங்காயத்த நறுகரதுக்கு எதாவது மிஷின் கண்டுபுடிச்சி இருந்தா சொல்லுங்கப்பா !! அவ்வ முடியல !!! :(

அடுத்த கட்டமா அடுப்புகூட சண்டை போட ரெடி ஆனேன்!ஆரம்பமே எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது .!!

நானும் ஸ்டவ் lighttara எடுத்து பர்னேர் மேல வச்சு நாப் தொறந்து கொளுத்தி பார்த்தேன்.. அடுப்பு பத்தவே இல்ல!!


அப்பறமா தான் தோனுச்சு சிலிண்டர ஆப் பண்ணி வச்சி இருபாங்களேன்னு ..! அதே மாறி ஆப் ஆகி இருந்தது !அத ஆன் பண்ணிட்டு ஒரு பெரு மூச்சு விட்டேன். (பாதி சமையல் முடிஞ்சா மாறி )

கொஞ்சம் எண்ணைய ஊத்தி நறுக்குன வெங்காயத்தையும் தக்காளியையும் வதக்க ஆரம்பிச்சேன் ...


அடுப்பு எந்த லெவெல்ல இருக்குன்னு தெரில்ல (வலது பக்கம் திருப்புணா கம்மியாவுமா?!? இல்ல எடதான்னு ?!?!) போட்ட ரெண்டாவது நிமிஷமே குபு குபுன்னு ஊட்டி ரயில் இன்ஜின் மாறி அப்படி ஒரு புகை !! கூடவே கருகுற மாதிரி ஒரு வாசனை வேற ... எப்படியோ அடுப்பு எரியரத கம்மி பண்ணிட்டு அதுல நாலு தம்ப்ளர் தண்ணிய ஊத்தினேன் (பாகெட்டுல அப்படி தான்ப்பா போட்ருந்தாங்க!!).


அடுத்த கட்டமா… அரசியல்வாதிங்க வாக்குறுதி மாறி “ரெண்டே நிமிசத்துல செஞ்சிறலாம் சமையல“ அப்படிங்ற விளம்பரத்த நம்பி …

மாகி பாகெட்டுல இருக்குற மசாலா பொடிய போட்டுட்டு அந்த நூடல்சையும் அதுல போட்டுட்டு.... "மணல் கயிறு" படத்துல சாந்தி கிருஷ்ணா சமையலுக்கு நம்ம விசு உதவி பண்ணுவாருல அது மாறியே என்னென்ன வாங்கிட்டு வந்திருந்தேனோ எல்லாத்தையும் அதுல போட்டு ஒரு தட்ட போட்டு மூடி என் இஷ்ட்டதெய்வத்த வேண்டிகிட்டேன் ...!


ஒரு அஞ்சு நிமிஷம் ஆச்சு அப்போ கூட சரியாய் வேகல அதனால இன்னுமொரு அஞ்சு நிமிஷம் கழிச்சு எடுத்து பார்த்தேன் நான் எதிர்பார்த்தமாறியே அடிபாகம் எல்லாம் கருகி வந்த்ருந்தது .

ஒரு வழியா மலைய சாச்சா மகிழ்ச்சில எடுத்து சாப்பிட்டு பார்த்தேன் .ஓர் அளவுக்கு சாப்பிடற மாறியே இருந்தது !! பரவைல்லையே நீயும் சமைக்க கத்துகிட்டியென்னு எனக்குள்ளே சொல்லிக்கிட்டு சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தேன் !!

பி.கு : சமையல் கலை வல்லுனர்கள் மன்னிக்கவும்....சில பல டிப்ஸ் கொடுதிங்கன்னா நல்லாவும் இருக்கும்....

பி.பி.கு : வேலை காரணமா வெளியூர்ல தங்கி இருக்கும் மக்கள் இது மாதிரி பல வீர செயல்கள் எல்லாம் பண்றது உண்டு ..நீங்க பண்ண சாகசத்தை கூட பகிர்ந்துக்கலாமே ..!!:)

பி.பி.கு :மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர்அடுத்த விஜய் படம் எந்த படத்தோட ரீமேக்கா இருக்கும் என ஆராயலாம் ... EKSI ..:(

Tuesday, February 16, 2010

பச்சை, ரோசு, பிங்கு தமிழன் ...

ஆமாங்க!! போன வாரம் தமிழ் படம் பார்த்தேன்..! அட தமிழ் படம் பார்க்கறது எல்லாம் என்ன பெரிய விஷயமாயா ??? அப்படின்னு நீங்க கேட்கறது தெரியுது..!

ஆனா இது முழுக்க முழுக்க வித்யாசமான "தமிழ் படம்"ஏன்..? என்ன வித்தியாசம்..? அப்படிங்கறத சொல்றேன் ...

• படத்தோட ஆரம்பமே சின்னதா ஒரு எதிர்பார்போட ஆரம்பிச்சானுங்க 'கருத்தம்மா' படத்துல வர கள்ளிப்பால் மேட்டர நல்லாவே ஓட்டிருபாங்க...

• அப்பறமா ஹீரோ சீக்கிரமா பெரிய ஆளா வளரணும்னு சைகிள் ஓட்ட சொல்லி அவரோட காலை மட்டும் காட்டி வளர வச்சது

• ஹீரோக்கு நண்பர்களா எப்பவும் வர முதியவர்கள் பட்டாளம்

• நாட்டமை !!அப்பறமா அவரு சொல்ற தீர்ப்புகள் ..

• சண்டை காட்சிகள், அதுவும் ஹீரோ சர்ட்ட கொஞ்சம் உதருனாருனாலே எல்லாம் பறந்து போவாங்க , எப்பவும் போல குத்து பாட்டு !

• அப்பறமா அண்டர் கவர் ஆபரேஷன் அதுக்காக அவரு செய்ற கொலைகள்... அதுல தண்ணி தொட்டில ஒரு ரௌடிய கொல்றது , டெல்லி கணேஷ கொல்றது (நோட் பண்ண வேண்டிய விஷயம்)

• எதுக்காக 'போக்கிரி' படத்தோட மைய கதைய எடுதுக்கிடானுங்கன்னு ஒரே கொழப்பமா இருக்கு!! (படம் நல்லா தானய்யா போயிட்டு இருந்தது !!)

• முக்கியமா ஹீரோ ஒரே பாட்டுல பெரிய பணக்காரர ஆவுறது (ஒரு காபி குடிக்கிற டைம்ல ..நோட் பண்ணுங்கப்பா)

• வில்லன் வழக்கம் போல ஹீரோயனிய கடத்திட்டு போறது ... அப்பறமா ‘புல்லட்’ ஹீரோ பொறுமையா ஆட்டோ புடிச்சு காப்பாத்த வர வரைக்கும் வெயிட் பண்றது .. செம்ம காமெடி...

• 'பெரிய நடிகர்கள கலாய்கிறோம்.. பிரச்சனை வருமோ..?' அப்படின்னு யோசிக்காம நடிச்சதுக்கு சிவாவிற்கு ஒரு ஸ்பெசல் கிளாப்.

• கதாநாயகி -ஒன்னும் சொல்றதுக்கில்ல!!

நான் மேல சொன்ன காட்சிகள் எல்லாம் எனக்கு புடிச்ச காட்சிகள் தான்.... மத்தபடி படம் முதல் பாகம் ரொம்ப நல்லா இருக்கு... இரண்டாம் பாகம் “என்ன பண்றது... படத்த ஆரம்பிச்சிடோமே....!!?” அப்படின்னு கொழப்பத்துல எடுத்த மாதிரி இருக்கு!!

பி.கு : "தமிழ் படம்" குடும்பத்தோட ... இல்லனா... கும்பலோட ஒரு தடவை பார்க்கலாம் !!

பி.பி.கு : லாஜிக் / ஆங்கில படங்கள் மோகம்/ இப்படி தான் இருக்கணும்.. அப்படிங்கற ரூல்ஸ பார்க்கம பார்த்திங்கன்னா புடிக்கும்!:)

பி.பி.பி.கு : "சுறா" படத்த ஏன் தான் இப்பவே ஓட்ட ஆரம்பிச்சிட்டாங்கன்னு தெரில்ல .. படத்த எடுக்க விடுங்கப்பா !!;)

பி.பி.பி.பி.கு : கோவா படம் ..எப்படி இருக்கு ?

பி.பி.பி.பி.பி.கு : மேற்கண்ட விசயங்களில் நாட்டம் இல்லாதோர் தைரியத்தை வரவழைத்து கொண்டு "தைரியம்" படம் பார்க்கலாம் !! EKSI:(

Saturday, November 7, 2009

வெற்றி/ தோல்வி ...

வெற்றி/ தோல்வி

வெற்றியை ருசிக்க
வேண்டுமா ?
தோல்வியை ரசிக்க
கற்றுக்கொள் !!
*********************************************************
வெற்றியின் களிப்பில்
நீ திளைத்திருந்தால்
உன்னை தெம்பேற்ற
சில தோல்விகளும் வருகிறது ....காத்திரு...!!
*********************************************************

Monday, September 28, 2009

பிரிவு /தனிமை!!



பிரிவில் தான்
பிரியம் தெரியுமாம் !
வா ஓர் இருமுறை
பிரிந்து பார்க்கலாம் !!
************************************
தனிமை சிறையும்
இனிதே !!
உன் நினைவுகள் என்னும்
காவல் இருக்குமாயின் !!
-மோகன்
*************************************
பி.கு : இந்த ஸ்வைன் ப்லூ காய்ச்சல் நிலவரம் எல்லாம் எப்படி இருக்கு !? அது வர மாதிரி தெரிஞ்சா "இன்று போய் நாளை வா !! " அப்படின்னு தினமும் சொல்லிருங்க !!;)

பி.பி.கு : மேற்கண்ட விஷயங்களில் நாட்டம் இல்லாதோர் நம்ம கேப்டனுக்கு போட்டியா வந்திருக்க "சிவகிரி" படம் பார்த்து என்சாய் பண்ணலாம் !!;)

Tuesday, June 9, 2009

நடைமுறையில் உள்ள சில வழக்கங்கள்...:)

நண்பர்களே ,

நம் நாட்டில் நடைமுறையில் உள்ள சில வழக்கங்களை நகைச்சுவையாக கொடுத்துள்ளேன் படித்து மகிழுங்கள் !!:) ...

வழக்கமான அரசியல் வாசகம் (எந்த கட்சி தோற்றாலும்):

*தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும் ... ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !!(அடங்குங்க ட டே!! )
*இது அக்கட்சியினரின் திட்டமிட்ட சதி !(ஆமா நீங்க பண்ணதே இல்ல ..!)
*நாங்கள் சிறந்த எதிர்க்கட்சியாய் இருந்து மக்களுக்காக பாடுபடுவோம் !!(ஆளு அட்ரஸ்ஸெ காணும் ....!)


வழக்கமான சினிமா வில்லத்தனம் :

*எப்பொழுதும் கதாநாயகியின் தந்தை செல்வந்தராக இருப்பார் முக்கியமாக தாதாவாக இருப்பார்
*கண்டிப்பாக ஹீரோவை அடிக்க ஆட்களை அனுப்புவார் இறுதியில் அவரே சென்று அடி வாங்குவார்
*கண்டிப்பாக கதநாயகியய் (சுமாராக இருந்தால் கூட ) கடத்தியே ஆகா வேண்டும் !!
*பின்பு கதாநாயகனிடம் அடி வாங்கி திருந்த வேண்டும் !



வழக்கமான சினிமாவில் காட்டப்படும் வாழ்கையின் முன்னேற்றம் :

ஒரே பாடலில் குடிசையில் இருந்து பளிங்கு மாளிகைக்கு சென்றுவிடுவர் ...

*நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிபாகுது......
*வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் ....
*வெற்றி கொடி கட்டு மலைகளை முட்டும் வரை முட்டு ....!!!! ......


வழக்கமான சினிமா ஹெரோஇசம் :

*ஊர் போற்றும் பிள்ளையாக விளங்குவது....
*கண்டிப்பாக தங்கச்சி இருக்கவேண்டும்....
*அதுவும் அந்த தங்கச்சியின் மாமியார் கொடுமை படுத்த வேண்டும் ...
*எவ்வளவு பலசாலியான எதிரியாய் இருந்தாலும் முடிவில் ஹீரோவிடம் அடிபட்டே ஆகா வேண்டும் ......
*பின்னணி இசையோடு கண்டிப்பாக 1 அல்லது 3 KM நடந்தே ஆகா வேண்டும் ...
*துப்பாக்கி சண்டையில் எவ்வளவு சுட்டாலும் ஹீரோக்கு மட்டும் ஒன்று அல்லது இரண்டு குண்டுகள் தான் பாயும் அதுவும் சரியாக கையில் தான் படும்
*வெடிகுண்டு வீசினால்... அதுவும் கார் சேசிங் என்றால் கண்டிப்பாக அது வேறுதிசையில் தான் விழும் !!
*எப்பொழுதும் கதாநாயகன் வெடிகுண்டை அது எங்கு இருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து விடுவார் அது மட்டும் அல்லாமல் அதன் சிவப்பு நிற வயரை துண்டித்து செயலிழக்க செய்வார் !!
*எவ்வளவு முரட்டான காளை மாடாய் இருந்தாலும் கண்டிப்பாக அது அடங்கியே ஆகா வேண்டும் ... அதற்க்கு கதாநாயகன் பாடினால் கூட சரி(பேச்சி பேச்சி பெருமையுள்ள பேச்சி .....) !!!!


வழக்கமான சினிமா போலீஸ்தனம்:

*எப்பொழுதும் துப்பாக்கியில் சுடும்போது முதலில் வானத்தை நோக்கி சுட வேண்டும் !!!
*(Major சுந்தராஜன் style) "You are under arrest" 'நான் உன்னை கைது செய்றேன்' -ர வசனத்தை எத்தன வருஷம் ஆனாலும் சொல்ல வேண்டும் !!
*எவ்வளவு பெரிய சண்டை நடந்தாலும் ஆடி அசைந்து ஹீரோ வில்லனை கொல்ல என்னும் போது வந்து தடுக்க வேண்டும் ....

-மோகன்

பி.கு : இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல !!! :)அனைத்தும் நீங்கள் சிரித்து மகிழ்வதர்க்கே !!